குருநாதரின் அருளுரைகள்

அன்பாயிரு ஆனால் அடிமையாயிராதே
இரக்கம்காட்டு ஆனால் ஏமாந்து போகாதே
கொடையாளியாயிரு ஆனால் ஓட்டண்டியாயிராதே
சிக்கனமாயிரு ஆனால் கருமியாயிராதே
சுறுசுறுப்பாய் இரு ஆனால் படபடப்பாய் இராதே
பொறுமையாய் இரு ஆனால் சோம்பலாய் இராதே
வீரனாய் இரு ஆனால் போக்கிரியாய் இராதே
இல்லறத்தை நடத்து ஆனால் காமவெறியனாய் இராதே
பற்று அற்று இரு ஆனால் காட்டுக்குப் போய் விடாதே
நல்லோரை நாடு ஆனால் அல்லாரை வெறுத்து விடாதே